நிலையில்லாத வாழ்க்கையில்
எதிலும் நிம்மதி இல்லமால்
வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும்
எங்கிருந்து வந்தாய் நீ
என் நிம்மதியாகவும்
என் ஆயிரம் உறவுகளின்
சொந்தகாரியாகவும்
எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!
நேசித்த உன்னை அடைய நினைத்து
அத்து மீறுகிறது என் இதயம்
என்னையும் மீறி என் சொல்லாத காதலை
உன்னிடம் சொல்ல
உன்னை நினைத்துகொண்டே வாழ்வது
காதல் என்றாலும்
உனக்கும் அந்த நினைவை பகிர
என்னை கேட்காமல்
அத்துமீற துடிக்கிறது என் காதல் என்னும் இதயம்
காதலுக்காக மட்டுமே
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...
சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு
(.. மன்னிக்கவும்..)...
இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்
யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து ... தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள் ..
நான் சொன்ன ஒரு வார்த்தையால் ...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று..