Sunday, September 11, 2011

தொடக்கம்!



எனது
ஒவ்வொரு
கவிதையிலும்!
பிள்ளையார் சுழி - "உன் அன்பு"
முற்றுபுள்ளி- "உன் பிரிவு"

புரிதல் மட்டுமல்ல




புரிதல் மட்டுமல்ல காதல்

புரியாததும் புரிந்து கொள்ள

தவமிருந்து பெறுவது அல்ல காதல்

தேடினாலும் கிடைக்காத காதல்

ஏனடி உன்மேல் எனக்கும்

என்மேல் உனக்கும் காதல்

புரிந்து கொள் காதல்

வெறும் புரிதல் மட்டுமல்ல

காதல் அகதி




உன் காதலில் விழுந்ததனால்

கைதியாகி விட்டேன்

என் தேசத்தை தொலைத்துவிட்டேன்

உன்னை என் உலகம் ஆக்கி விட்டேன்

முடிவாய் அகதி ஆகிவிட்டேன்

காதல் (அ)கைதியாய் மாறிவிட்டேன்

தேவதை



என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...

முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...

உங்களை தொட்டுப் பறிக்க...

தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...

அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...

Friday, September 2, 2011

நிலையில்லாத வாழ்க்கை


நிலையில்லாத வாழ்க்கையில்
எதிலும் நிம்மதி இல்லமால்
வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும்
எங்கிருந்து வந்தாய் நீ
என் நிம்மதியாகவும்
என் ஆயிரம் உறவுகளின்
சொந்தகாரியாகவும்

என் கவிதைகள் ..


எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!


என் கற்பனைகள்


என் கற்பனைகள்தான்

அதிகமாய் வாசகர்களுக்கு

காட்டிக் கொடுக்கிறது

உன்னை நான் கவிதையாய்

காதலிப்பதை

Thursday, August 25, 2011

சுமைதாங்கி



உன்னைச் சுமந்தே
சுமைதாங்கியான
என் இதயம்

ஏன்
நீ இறங்கியதும்
இப்படி ஒற்றைக்
காலில் நிற்கிறது

தவிப்பு



உன்னிடம் பேசும்போது மட்டும் தான்,

என் தமிழும் தலையில் தட்டுகிறது..

இன்றாவது திருந்த பேசு என்று ..!!

காத்திருக்கிறேன்


காத்திருக்கிறேன்!!!!
நீ எனை காதலிக்கிறாய்
என்பதை கேக்க
காத்திருக்கவில்லை

நீ என்னை காதலிக்கவில்லை
என்பதையாவது கேக்கத்தான்
காத்திருக்கிறேன்

என் கவிதைகள்

என் கவிதைகள்
அப்படி என்னதான்
பாவம் செய்தது

உன்னால்
பாவமாக்கப்பட்ட
எனக்கு
பிறந்ததை தவிர

Monday, August 22, 2011

அறியாமலே



விழிப்பார்வையை
வழிப்பாதையாய்
பின்தொடர்ந்தேன்..
என் வாழ்க்கை பாதை
திசைமாறியதை அறியாமலே..!

Sunday, August 21, 2011

அழகு


உன்னுடைய
உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை ......!!


என்னுடைய பெயர்
இதனை அழகாய்
இருக்கிறதென்று ....!!

அத்து மீறல்கள்




நேசித்த உன்னை அடைய நினைத்து
அத்து மீறுகிறது என் இதயம்
என்னையும் மீறி என் சொல்லாத காதலை
உன்னிடம் சொல்ல
உன்னை நினைத்துகொண்டே வாழ்வது
காதல் என்றாலும்
உனக்கும் அந்த நினைவை பகிர
என்னை கேட்காமல்
அத்துமீற துடிக்கிறது என் காதல் என்னும் இதயம்

மௌனம் களை



திட்டியாவது ஒரு வார்த்தை பேசு

உன் வார்த்தைகள் என்னை காயப்படுத்தும்

என்று அறிந்தும்

அதையே நான் வேண்டுகிறேன்

என் காயங்களுக்கும் அதுவே மருந்து என்று

விழிப்பறி கொள்ளயர்களாய்.......



வழிப்பறி கொள்ளையர்கள்

மறைந்துபோய்

விழிப்பறி கொள்ளயர்களாய்

சில கன்னிகள்.....



Thursday, August 18, 2011

அதனால்தான்




பெருகிக்கொண்டே இருக்கிறது
உன் நினைவுகள்...

என்
ஒரு கை பிடி அளவு இதயத்திற்குள்
பூட்டியா வைக்க முடியும்...

அதனால் தான்
இந்த கவிதைகள்...

Wednesday, August 17, 2011

நீ மேல் இமை நான் கீழ் இமை

நீ மேல் இமை

நான் கீழ் இமை

வா கனவிலாவாது

ஒன்றாவோம்

நீ இல்லாமல் ....


அன்று என் கண்ணீர் கூட
சுகமானது தான்
துடைக்க நீ இருந்ததால் ...!
ஆனால்
இன்று என் சிரிப்பு கூட
வேதனையை தருகிறது
சேர்ந்து சிரிக்க
நீ இல்லாமல் ....

ஒப்பீடு


நிலவின் அழகு குறைவுதான்
உன்னுடன் ஒப்பிடுகையில்

இருட்டின் கருமை குறைவுதான்
உன் கூந்தலுடன் ஒப்பிடுகையில்
மின்னலின் வெளிச்சம் குறைவுதான்
உன் பார்வையுடன் ஒப்பிடுகையில்

தாலாட்டின் அழகு குறைவுதான்
உன் பேச்சுடன் ஒப்பிடுகையில்

கிளி அலகின் நிறம் குறைவுதான்
உன் வெட்கத்துடன் ஒப்பிடுகையில்

மலரின் மேன்மை குறைவுதான்
உன் பாதங்களுடன் ஒப்பிடுகையில்

மயிலின் நடன அழகு குறைவுதான்
உன் நடையுடன் ஒப்பிடுகையில்

உன் நேசம் எனக்கு பெரிதுதான்
என் வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில்

நீ பார்த்தும் பாரமல்

நீ
பார்த்தும் பாரமல்
கடந்து செல்கிறாய்

நான்
தெரிந்தும் தெரியாமல்
தொடர்கிறேன் உன்
பின்னால்

வேண்டுகிறேன்


குடை பிடித்தபடி
உன்னோடு சேர்ந்து பயணிக்க
மழை வர வேண்டுகிறேன்!

மரத்தடி நிழலில் ஒதுங்கி
உன்னோடு பேசிக் கொண்டிருக்க
வெயிலடிக்க வேண்டுகிறேன்!

கூந்தல் வாசம் நுகர்ந்தபடி
உன்னோடு பொழுதை கழிக்க
தென்றல் வீச வேண்டுகிறேன்!


கடலில் கால் நனைத்தபடி
உன்னோடு விளையாடிக் கொண்டிருக்க
அலையடிக்க வேண்டுகிறேன்!

கவிதை சொல்லியபடி
உன்னோடு காலார நடக்க
பாதை நீள வேண்டுகிறேன்!

காதலித்தபடி
உன்னோடு ஆயுள் முழுதும் வாழ
நீ என் மனைவியாக
வேண்டுகிறேன்
...








Tuesday, August 16, 2011

மௌனித்த இதயம்




அறுபது வயதையே
ஆட்டி வைக்கும் காதல்
இருபது வயது என்னை மட்டும்
விட்டு விடுமோ


லேசாக உரசிப் பார்த்தது
விழுந்து விட்டேன்
விழுந்தது முள்ளில் அல்ல
முல்லையில் தான்
அதனால்தான் என் மனம்
எழுந்திருக்க முடியாமல்
மௌனித்துநிற்கிறது

Monday, August 15, 2011

மீண்டும் வருமா



காலங்கள்
கடந்து போகும் நேரத்தில் நான்
கண்ணீரோடு திரும்பிப் பார்க்கிறேன்
நாம் பழகிய நாட்கள் மீண்டும் வருமா என்று.

Go through periods of time
I'll be back with tears
Familiar days that we made ​​again.

Sunday, August 14, 2011


கவிதைகள் எழுதிய
அனுபவங்கள் இல்லை
அனால் இன்று.....
நான் எழுதுபவை
அனைத்தும் கவிதைகளாகின்றது

என்னவளால் !!!

வெற்றி என்ன ..? தோல்வி என்ன...?



காதலுக்காக மட்டுமே
கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய் ...
சரி விடு .. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு
(.. மன்னிக்கவும்..)...
இதுவும் என் காதலுக்காகத் தானே ... ! ! !

தயக்கம்



நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்
யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து ... தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள் ..
நான் சொன்ன ஒரு வார்த்தையால் ...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று..